வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

என் தந்தையைப் பற்றி எளிய அறிமுகம்

என் தந்தை பெயர் திரு.தி.வி.சுப்பிரமணியம்.
தலைமை ஆசிரியராக கோவை அனுப்பர்பாளையம் துவக்க பள்ளியிலும், தமிழ் ஆசிரியராக தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியிலும் பணியாற்றினார்.
தியாகராஜ பாகவதருக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தார்.
பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள புரவிபாளையம், ஊத்துக்குளி ஜமீந்தாரர்களுக்கு தமிழ் இலக்கிய நயத்தை எடுத்து உரைத்து ஆர்வத்தை தூண்டினார்.
தொண்ணூறு வயதிற்கு மேல் வாழ்ந்தார்.
சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகளில் சில.
௧) தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தான் முதன்முதலாக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் நாட்டு நடப்பை அறிந்து கொள்வது அவசியம் எனக் கருதி அறிவிப்பு பலகையில் அன்றைய செய்திகளை எழுதி வந்தார். தற்போது அனைத்து பள்ளிகளிலும் இது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
௨) கோவை புலியகுளத்தில் பாமர மக்கள் அறிந்து பயன் பெற இலவசமாக திருக்குறள் வகுப்பு நடத்தியதை பாராட்டும் வகையில் அவருக்கு எடைக்கு எடை நெல் தரப்பட்டது.
௩) தூய மைக்கேல் பள்ளியில் இறை வணக்கத்தை தமிழில் மொழி பெயர்த்தார்.
(வெகு காலமாக இதனை பள்ளியில் பாடி வந்தனர் - தற்போது மாற்றப் பட்டுவிட்டது.)
௪) பேருர் கனகசபையிலிருப்பதைப் போன்று சாக்பீசால் சங்கிலி செய்தார்.
மேலும் பலவற்றைப் பற்றி எழுத உள்ளேன். வாசிப்பவர்களுக்கு மேலும் விவரம் தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

கருத்துகள் இல்லை: