வியாழன், 22 அக்டோபர், 2009

சிலையெடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

பாதர் சின்னையன் என்னை அதிகமாக நேசித்தார். அவர் என்னிடம் கலந்து பேசாமல் எதையும் செய்ய மாட்டார். பாதருடைய பிறந்த நாளிலும் மற்றும் விழாக்களின்போதும் அவர் ஆசிரியர்களுக்கு இரு வகை விருந்து (சைவம்+அசைவம்) கொடுத்து மகிழ்விப்பார். இந்த பாரபட்சமற்ற செயல் அவரது புகழை மேலும் உயர்த்தியது. இவ்வாறு தலைமை  ஆசிரியர் தம்முடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருந்து கொடுப்பதும்,  சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களை  ஏகடியம் செய்யாது, ஒதுக்காது, மதித்து உபசரிப்பது வேறு எங்குமே காண முடியாது. பாதர் சின்னையன் காலம் புனித மைக்கேல் மேனிலைப் பள்ளியின் பொற்காலம்.
1964ல் ரோமாபுரிலிருந்து போப்பாண்டவர் ஜான்பால் பம்பாய் வருவதாக கேள்வியுற்ற பாதர் சின்னையன் ஆசிரியர்களை  அழைத்துக் கொண்டு பம்பாய் போக திட்டமிட்டார். பள்ளி பேருந்தில் நாங்கள் டிசம்பர் மாதம் சமையற்காரருடன் புறப்பட்டோம்.
வழியில் கத்தோலிக்கப் பள்ளிகளில் இரவு நேரங்களில் தங்கினோம். ஐதராபாத்தில் உள்ள "சாலார்ஜங் மியூசியம்" கண்டுகளித்தோம்.
உலகில் வேறு  எங்கும் காணமுடியாத "மகதலேனாள்"  எனும் ஒரு பெண்ணின் சிலை கண் கொள்ளாக் காட்சியாகும்.  அப்படியென்ன அதில் விசயம்?

கருத்துகள் இல்லை: