திங்கள், 9 மார்ச், 2009

திருமணம்

என் முதல் திருமணம் ஆம்பூரில் நடந்தது. கோவையிலிருந்து ஆம்பூருக்கு இரயில் கட்டணம் 3ரூபாய். சென்னைக்கு 5ரூபாய். ஜோலார்பேட்டையிலிருந்து நான்காவது இரயில் நிலையம்தான் ஆம்பூர்.
1931ல் திருமணம் - 5 நாட்கள் - (மாப்பிள்ளை அழைப்பு, தாராமுகூர்த்தம் , ஒளபாசனம், பாங்குனி முகூர்த்தம், நாகவல்லி) அப்போது என் வயது 22. 1932ல் அதாவது என் 23வது வயதில் நான் குடுமி எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக் கொண்டேன். பின்பு வேலை தேடத் தொடங்கினேன்.
என் ஆசிரியர் பயிற்சியைக் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளில் முடித்தேன். அங்கு நடைபெற்ற ஒரு ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அது இன்றும் என்னிடம் உள்ளது. சர்ட்பிகேட் தொலைந்து போயிற்று.
பின்பு ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினேன். பாப்ப நாயக்கன்பாளையம் முனிசிபல் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினேன். மாதம் ரூ.18. பின்பு ஜெயில்ரோட்டிலிலுள்ள முனிசிபல் பள்ளியில் பணியாற்றிய காலத்தில் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அது என் பொற்காலம். அது என்ன? அடுத்த இடுகையில்...

கருத்துகள் இல்லை: