புதன், 2 செப்டம்பர், 2009

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்பிரமணிய சுவாமி உனை மறந்தேன்...

          இரயிலில் அருகில் அமர்ந்த பாகவதரிடம், `திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையாருக்குக் கும்பாபிஷேகம் செய்தீங்களாமே! ஒரு குடம் பாலை அந்தக் கல்லின் மீது ஊற்றினீர்களாமே! அது முட்டாள்தனமில்லையா? வாசல் படியில் நாம் காலால் மிதிக்கிற கல்லைத் தூக்கி வைத்து அதைக் கடவுள் என்று சொல்வது மடத்தனம் இல்லையா?` என்றார் பெரியார்.
            `இல்லை. அது வாசப்படியில் கிடக்கும்போது, வெறும் கல்லாகவே நினைக்கிறோம். அதேக் கல்லையே கோவிலில் வைத்துக் கடவுளாக எண்ணி வணங்குகிறோம். எல்லாம் மனம்தான் காரணம்.
             இன்னொன்று சொல்கிறேன் - என் அருகில் என் மனைவியும் தங்கையும் நிற்கிறார்கள். - இருவரும் பெண்கள் - மனைவியைத் தங்கையாகவோ, தங்கையை மனைவியாகவோ நினைப்பதில்லை. அதைப் போலத்தான் கல்லை நாம் நினைப்பதைப் பொருத்தது.` என்று விளக்கினார் பாகவதர்.
            எதிர் சீட்டில் உள்ளவர்கள் `சபாஷ் பாகவதர்!` என்று சொல்லி சிரித்தார்கள். `இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது` என்றார் பெரியார். உடனே பாகவதர் வாதம் பிடிவாதமானால் விளக்கி பய்னில்லை என்று உணர்ந்து என்னைப் பார்த்து சைகை செய்தார். அதைப் புரிந்து கொண்ட நான் செக்ரட்டரியிடம் மெல்ல சொல்லி, பெட்டி படுக்கைகளை அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்கு எடுத்துப் போகச் செய்தேன்.
           `ஐயா, எங்கள் சீட் அடுத்த கம்பார்ட்மெண்டில் உள்ளது. எனக்கு விடை கொடுங்கள்` என்றார் பாகவதர்.
         `பாகவதர், போய் வாங்கோ. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்` என்றார் பெரியார்.
          

1 கருத்து:

natbas சொன்னது…

arumaiyaana nadai. asatthiringalae? Idu pol innum niraiyaa ullidunga anna!