ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

ஆந்திராவிலிருந்து தமிழ் நாட்டிற்கு....

எனக்கு வயது பன்னிரண்டு இருக்கும். அப்போது என் பெரியப்பா, மாமா குடும்பங்கள் நீண்ட காலத்துக்குப் பிறகு ஆந்திராவிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது சில சடங்குகள் செய்வது வழக்கம்.
       உப்பிலிபாளையத்திலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு எல்லோரும் போனோம். நல்லெண்ணெய் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் தலை குனிந்தபடி நாங்களும் அவர்களும் இருவர் இருவராக முகம் பார்த்துக் கொண்டோம். என் பெரியப்பாவிடம் சிறிது தெலுங்கு கற்றுக் கொண்டேன். தினமும் வீட்டில் விருந்து சாப்பாடு. ஒரே கலகலப்பு. வீட்டில் முன்புறம் அகன்ற திண்ணையில் அமருவார்கள் (J.M.Sons Bakery) எதிரில்.இருந்தது வீடு.
          அவர்கள் எனக்கு காயத்ரி மந்திரமும் சந்தியா வந்தனமும் சொல்லித் தந்தார்கள். ஏழெட்டு ஆண்டுகள் கோவையில் தங்கிவிட்டுப் பிறகு ஆந்திராவிற்கே போய்விட்டார்கள். இன்று அவர்களுடைய சந்ததிகள் அங்கே இருக்கிறார்கள்.
       எங்கள் வீட்டுக்குச் சற்று தூரத்தில் ஒரு பங்களாவில் திரு.டால்பி எனும் ஆங்கிலேயர் இருந்தார். அவர் வீட்டுக்கு அடிக்கடி நான் செல்வதுண்டு. அவர் எனக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தார். பட்டாணிக் கடலையும் நிறையத் தந்தார்.

கருத்துகள் இல்லை: