ஞாயிறு, 27 டிசம்பர், 2009

இரவிச்சந்திரனின் திருமணமும், உதவி செய்த நல்ல உள்ளங்களும்

இரவிச்சந்திரனுக்கு மேட்டுப்பாளையத்தில் விதவைத் தாயுடன் வசித்துக் கொண்டிருந்த சரசுவதியைத் திருமணம் செய்து வைத்தேன். சரசுவதி பிரிக்கால் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் என் அன்பு மகள் பானுமதியும் அவளது கணவர் திரு.பாலசுப்பிரமணியமும் அவர்களது உதவியை நான் எக்காலத்தும் மறக்க முடியாது. இரவிச்சந்திரன் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இரவிச்சந்திரனை I.T.I யில் சேர்த்துப் படிக்க வைத்தேன். அவன் படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டான். காரணம் எனது வறுமை நிலைதான். அதை நினைத்து நானும் இலட்சுமியும் வருத்தப்படாத நாளே கிடையாது.
ஆனால் சில ஆண்டுகள் கழிந்தபின், என் பொருளாதாரம் சற்று உயரத் தொடங்கியது. ஒரு நாள் எதிர்பாராமல் அவினாசி ரோட்டில் நான் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திரு.பி.எஸ்.ஜி கோவிந்தசாமி தமது காரில் எதிரில் வந்தார். என்னைக் கண்டதும் காரை நிறுத்தி என்னை தன்னுடன் காரில் வருமாறு அழைத்தார்.

கருத்துகள் இல்லை: