ஞாயிறு, 6 டிசம்பர், 2009

குறள் போல் வாழ்

கோவையை அடுத்துள்ள சவுரிபாளையத்தில் 6 ஆண்டுகள் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன். மாரியம்மன் கோவிலில் மாலை 7 மணி முதல் 9 மணி வரை  ஞாயிறுதோறும் வகுப்பு நடந்தது. 25 முதல் 35 வரை மக்கள் வ்ருவார்கள். இடையிடையே குறளுக்கு தக்கபடி சிறு சிறு கதைகள் சொல்வதை மக்கள் விரும்பிக் கேட்டார்கள்.
இரவில் நான் வீடு திரும்ப என்னை வண்டியில் அனுப்பி வைத்தார்கள். ஆறு ஆண்டுகள் முடிந்தபின் எனக்கு பாராட்டு விழா நடத்தி எடைக்கு எடை நெல்லும், ஒரு தட்டு நிறைய ரூபாய் நாணயங்களும், பொன்னாடையும் அளித்து பெருமைப் படுத்தியவர்கள் யார்? அவர்கள் தான் திரு.ஆறுமுகத் தேவரும் அவரது மனைவியார் திருமதி வள்ளியம்மாளும்.
இந்நிகழ்ச்சியை நான் என்றும் மறக்க முடியாத ஒன்று. திருக்குறள் வகுப்பில் நான் சொன்ன விளக்கங்கள் என் மனதையும் செம்மைப் படுத்தியது.
அடுத்து புலியகுளத்தில் ஓராண்டு குறள் வகுப்பு நடத்தினேன். அதற்கு ஏற்பாடு செய்து பொருளுதவி செய்த திரு. குப்புராசு என்பவர் பிற்காலத்தில் தமிழ் கல்லூரியில் சேர்ந்து ‘புலவர்’ பட்டம் பெற்றார்.

கருத்துகள் இல்லை: